Breaking News

14 அடி ராஜநாகத்தை வெறும் கையால் அசால்ட்டாக பிடித்த நபர்! வைரல் வீடியோ!


தாய்லாந்தில் 14 அடி நீளமுள்ள ஒரு ராஜ நாகப்பாம்பை தன்னார்வத் தொழிலாளி ஒருவர் தனது வெறும் கைகளால் நேர்த்தியாக பிடித்த வீடியோ இனையத்தில் வைரலாகி வருகின்றது.

தாய்லாந்து நாட்டின் தெற்கு மாகாணமான Krabi-ல் உள்ள பனை தோட்டத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துஇ கழிவுநீர் தொட்டியில் மறைந்து கொள்ள முயன்றதாக உள்ளூர்வாசிகள் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, Ao Nang துணை மாவட்ட நிர்வாக அமைப்பின் தன்னார்வ தொண்டரான Sutee Naewhaad, பாம்பை பிடிக்க வந்தார். பின்னர் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் துரிதமாக செயல்பட்டு பாம்பை பிடித்தார். பிடிபட்ட அந்த ராட்சத நாகப்பாம்பு 4.5 மீட்டர் (கிட்டத்தட்ட 14 அடி) மற்றும் 10 கிலோகிராம்களுக்கு மேல் எடையுள்ளதாக கூறப்படுகிறது. 

நவ்ஹாத் (40) முதலில் ஒரு திறந்த சாலையில் பாம்பை வெளியே இழுத்து, பின்னர் அதைப் பிடிக்கும் முயற்சியைத் தொடங்கினார். அத்தனை பெரிய விஷப்பாம்பை அவை மிக எளிதாக பிடித்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

உள்ளூர் தகவல்களின் படி, பாம்பு பிடிப்பவர் கூறுகையில், அந்த நாகப்பாம்பு பிடிபட்ட பின்னர் அதன் இயற்கையான வாழ்விடத்தில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. சமீபத்தில் மற்றொரு நாகப்பாம்பு உள்ளூர் மக்களால் கொல்லப்பட்டதால், இந்த பாம்பு தனது துணையைத் தேடிக்கொண்டிருக்கலாம் என்று அவர் கூறினார். 

ராஜ நாகப்பாம்பு ஒரு விஷ பாம்பு இனமாகும், இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே உள்ளது. இது உலகின் மிக நீளமான விஷப் பாம்பு, சராசரியாக 10 முதல் 13 அடி நீளம் கொண்டது. கணிசமான அளவு பாம்புகளைக் கொண்ட தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய அரச நாகப்பாம்பு ஒன்று 18 அடி மற்றும் 4 அங்குல நீளத்தில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.



No comments