Breaking News

CID யின் 5வது மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்த பெண் - விசாரணை ஆரம்பம்


குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து பாய்ந்துஇ பெண்ணொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக வருகைத் தந்த பெண்ணொருவரேஇ இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை, 60 மில்லியன் ரூபா நிதி மோசடி ஒன்று தொடர்பிலான விசாரணைகளுக்காகவே குறித்த பெண்இ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 46 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(Vavuniyan)

No comments