தற்போது முதல் மீண்டும் புகையிரத பணிப்பகிஷ்கரிப்பு - அதிரடி தீர்மானம்
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உடன் அமுலுக்குவரும் வகையில், மீண்டும் பணிப் பகிஷ்கரிப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புகையிர நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபத் தலைவரை பணி இடைநிறுத்தம் செய்ய புகையிரத பொது முகாமையாளர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று (13) முன்னெடுக்கப்பட்ட 24 மணிநேர அடையாள பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம், இன்று (14) அதிகாலை கைவிடப்பட்ட பின்னணியிலேயே, மீண்டும் பணிப் பகிஷ்கரிப்புக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments