Breaking News

தைப்பொங்கல் தினத்தில் கடலில் குளிக்கச்சென்ற மாணவர்களிற்கு ஏற்பட்ட நிலை


மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

கிரான் தேசிய பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் 07 மாணவர்கள் நண்பகல் வேளை அருகிலுள்ள கடற்கரைக்குச் சென்று குளித்துள்ளனர். இதன் போது கிரானைச் சேர்ந்த ஜீ.சுஜானந்தன் (வயது -16), ச.அக்சயன் (வயது - 16) இருவரும் கடல் அலையில் சிக்கி காணமால் போன போதும் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

இதேவேளை கடலில் காணாமல் போனவரைத் தேடும் பணியில் கடற்படையினர், கல்குடா சுழியோடிகள், மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கல்குடா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







No comments