மாத சம்பளம் பெறுவோருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை
கொவிட் பரவல் அதிகரித்து வருகின்றமையினால், எதிர்வரும் காலத்தில் நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் பட்சத்தில், மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் நபர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள் என பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
அவ்வாறான நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்லாதிருப்பதற்கான பொறுப்பு, நாட்டு மக்கள் வசமே காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
மக்கள் மூன்று தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்வது மாத்திரமன்றி, சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், அவ்வாறான நிலைமையை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது எனவும் அவர் கூறுகின்றார். (Vavuniyan)
No comments