இனி தட்டுப்பாடு இல்லை! மகிழ்ச்சியான செய்தி
எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளதாகவும் இனிமேல் மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிறிய அளவிலான வர்த்தக நிலையங்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கின்றது.
கடந்த காலங்களில் நாளாந்த எரிவாயு சிலிண்டர்களுக்கான கேள்வி சுமார் இரண்டு இலட்சமாக காணப்பட்டது.
எனினும், தற்போது அவற்றின் எண்ணிக்கை 90 ஆயிரமாக உள்ளது. இதன்படி, நிறுவனத்தினால் தற்போது நாளாந்தம் 90 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கின்றது.
இரண்டரைக் கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர்களைப் பகிர்ந்தளிப்பதில் சிறு தாமதம் நிலவுதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments