Breaking News

இன்னும் ஒரே வாரத்தில் எரிவாயுவுக்கு தீர்வு!


தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இதனை தெரிவித்திருந்தார். 

இலங்கையில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், மக்கள் நாளாந்தம் அத்தியாவசிய  உணவு பொருட்களுக்கும், எரிவாயுவுக்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் எரிவாயு வரிசைகள் தினமும் நீண்டு கொண்டே  செல்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதித்துள்ளதோடு, சிறு சிறு உணவகங்கள் மற்றும் வியாபார நிலையங்கள் என்பனவும் மூடப்பட்டுள்ளதோடு அதனை நம்பி வாழும் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின்  வாழ்வாதாரமும் கேள்விக்குறியதாக மாறியுள்ளது.

இதேவேளை, இன்றும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் நாட்டில் ஆங்காங்கே பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்திருந்தார்.(Vavuniyan) 

No comments