Breaking News

வவுனியாவில் மின்தடை தொடர்பில் வெளியான தகவல்


உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . 

அதன்படி நாளை (11) ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி
வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.

வவுனியா பிரதேசத்தில் அரசன் அரிசி ஆலை, வைரப்புளியங்குளம். ஆதி விநாயர் கோவிலடி, மகாறம்பைக்குளம், ஆச்சிபுரம், ஆசிகுளம், எல்லப்பர் மருதங்குளம், கற்குளம் (சிதம்பரபுரம்), கோமரசங்குளம் மாதா கோவிலடி, மகா மயிலங்குளம், மதுராநகர் கல்நாட்டினகுளம், பெரியகூமரசங்குளம், சமணங்குளம், சிதம்பரபுரம், மதவுவைத்தகுளம், தவசிக்குளம், குட் செட்வீதி, தோணிக்கல், குளோப் அரிசி ஆலை, பண்டாரிக்குளம், முகத்தான்குளம் முதலாவது பண்ணை, குருக்களூர் மன்னார் வீதி, நீலியமோட்டை, பறயணாளங்குளம் குருக்களூர் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan) 

No comments