Breaking News

இலங்கையில் தொற்று 12%, மரணம் 17% அதிகரிப்பு


வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒட்சிசன் தேவைப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளதாகவும் அந்த எண்ணிக்கை தற்போது 12 வீதமாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அன்றாடம் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், அந்த எண்ணிக்கை 17 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்று கரணமாக மரணிப்போரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர்களில் 60 வீதமானோர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளை முறையாகப் பெற்றுக்கொள்வது தொடர்பாக மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(Vavuniyan) 

No comments