வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் மீது தாக்குதல்
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (20) கோவில்குளம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் வைத்தியசாலையின் விபத்து பிரிவிற்குள் அத்துமீறி நுழைந்த நான்கு பேரடங்கிய குழுவினர் குறித்த மாணவன் மீது மீண்டும் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை காயமடைந்த பாடசாலை மாணவனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு தாக்குதல் நடாத்திய குழுவினர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(Vavuniyan)
No comments