ஆடை பிரச்சினை – மகளிர் கல்லூரியில் அமைதியின்மை
இந்த அமைதியின்மை இன்று (02) காலை முதல் நிலவி வருவதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், வேறு மதத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, அவரது ஆடை தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக, குறித்த ஆசிரியை பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை ஷாயிரா கல்லூரிக்கு அவரை இடமாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இவ்வாறான நிலையில், குறித்த ஆசிரியை, மீண்டும் ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு இடமாற்ற கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையிலே, அவர் இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்க பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார்.
இதன்போது, மீண்டும் ஆடைத் தொடர்பில் பிரச்சினை எழுந்த நிலையில், பாடசாலை வளாகத்தில் அமைதியின்மை நிலவி வருகின்றது.
இந்த அமைதியின்மையினால், பாடசாலையின் அதிபர் மற்றும் குறித்த ஆசிரியை ஆகியோர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல் நிலைமை பாரதூரமாக இல்லை என பொலிஸார் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Vavuniyan)
No comments