முக கவசமின்றி கடமையாற்றும் சதோச ஊழியர் - பலரும் விசனம்
குறித்த கிளையில் மக்கள் அதிகளவில் வந்து போகும் நிலையில் இன்று காலை அங்கு பொருள் கொள்வனவு செய்ய வந்தவருக்கும் ஊழியர் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் பொலிஸார் அங்கு வருகை தந்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் அங்கு பணிபுரியும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் முக கவசத்தினை தனது உடையில் வைத்துள்ள நிலையில் பொலிஸாருக்கு முன்பாக முக கவசமின்றியே காணப்பட்டார்.
இதேவேளை பொருட்களை கொள்வனவு செய்ய வந்தவர்களும் குறித்த சதொச கிளையில் சில ஊழியர்கள் முக கவசமின்றியே கடமையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். எனவே இது தொடர்பில் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். (Vavuniyan)
No comments