Breaking News

பொலிஸ் அதிகாரியை எரித்து கொன்ற முன்னாள் இராணுவ வீரர்


கோனாபீனுவல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் காவல் அதிகாரி ஒருவர் தனது கணவனால் தீயிட்டு எரிக்கப்பட்டதில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி பலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக கோனாபீனுவல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கோனாபீனுவல வடுகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் முன்னாள் இராணுவ அதிகாரி ஆவார், அவர் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டு மீனவராக பணியாற்றி வருகிறார்.

சந்தேக நபர் தனது மனைவி பணிக்கு சென்றிருந்த நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்பியதாகவும், மனைவி வீடு திரும்பிய பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து சந்தேக நபர் பெண் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அந்த பெண் தீயை அணைக்க முயன்ற போதிலும், அவர் அதை செய்யத் தவறியதால்இ அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவர்கள் அம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான பெண்ணையும், சிறிய காயங்களுடன் இருந்த அவரது கணவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சந்தேகநபர் பலபிட்டிய நீதவான் வைத்தியசாலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (Vavuniyan)

No comments