நள்ளிரவில் வீடுநுழையும் வன்முறைக் கும்பல்!! யாழில் அச்சநிலை (படங்கள்)
நேற்று நள்ளிரவு 12:15 மணியளவில் குறித்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வலி. வடக்கு பிரதேச சபையின், முன்னாள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரான நல்லையா புரட்சிதாசனுடைய வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறைக்கும்பல் வீட்டின் முன் கதவு, கூரைத் தகரங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியதுடன், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
வீட்டின் கதவை திறக்க முடியாத நிலையில் குறித்த வன்முறை குழு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து வீட்டின் உரிமையாளரான நல்லையா புரட்சிதாசன் இன்று காலை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு வீடுகளுக்குள் வன்முறைக்கும்பல் அத்துமீறி நுழைவதால் யாழ்ப்பாணத்தில் அச்சநிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments