Breaking News

வவுனியாவில் “ஒரு இலட்சம் பணிகள்” வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!


வரவு செலவுத்திட்டத்தின் மூலம் “ஒரு இலட்சம் பணிகள்” எனும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அந்த வகையில் வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியிலும் குறித்த நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
அத்துடன் சமுர்த்தி பயனாளிகளிகளிற்கான வாழ்வாதாரத்திட்டத்திற்கான உறுதிக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டதுடன், 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான கிராமசேவகர் அலுவலக கட்டடத்திற்கான அடிக்கல்லும் இதன்போது நாட்டப்பட்டது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எ.சரத்சந்திர, பிரதேசசெயலாளர் நா.கமலதாசன், பொதுமக்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். (Vavuniyan)






No comments