மாணவர்களுக்கு வினாத்தாள் கிடைக்கவில்லை – அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
நேற்று இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது, சித்திர பாடத்திற்கு தோற்றிய மாணவர்கள் இருவருக்கு, அந்த பரீட்சையின் இரண்டாம் பாகம் வினாத்தாள் கிடைக்கப்பெறவில்லை.
இது தொடர்பில் கம்பஹா வலய கல்வி காரியாலயத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா தக்ஸிலா வித்தியாலயத்தில் ஒரே மண்டபத்தில் தோற்றிய இரண்டு மாணவர்களுக்கே இவ்வாறு வினாப்பத்திரம் வழங்கப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக பரீட்சை திணைக்களத்தின் ஆலோசனையின் அடிப்படையில், குறித்த பரீட்சை மண்டபத்தின் தலைமை மேற்பார்வையாளர் மற்றும் உதவி மேற்பார்வையாளர் ஆகியோர் பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கம்பஹா வலயக் கல்வி பணிப்பாளர் அநுர பிரேமலால் தெரிவித்தார். (Vavuniyan)
No comments