Breaking News

தேசிய பாடசாலையின் ஆசிரியர் உயிரிழப்பு (PHOTO)


நுவரெலியா பிரதான வீதியின் தலவாகலை பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது.

தலவாகலை பிள்ளையார் ஆலய பகுதியில் அமைந்துள்ள மரத்தை இன்று (21) அகற்றும் சந்தர்ப்பத்தில், மரம் வீழ்ந்து, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 3 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தலவாக்கலை தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலவாகலை தமிழ் வித்தியாலயத்தில் பணிப்புரியும் 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த மரத்தை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது என கோரி, பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவத்தில் உயிரிழந்த ஆசிரியரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(Vavuniyan)


No comments