சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தாயின் காதலன்
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் காதலனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, தாய், குறித்த சந்தேகநபருடன் தொடர்புகளை பேணி வந்தமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தென்னை நார் தொழிற்சாலை ஒன்றிலேயே இருவரும் பணிப் புரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சந்தேகநபர் கடந்த ஜுலை மாதம் முதல் தன்னை தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி, சிலாபம் பொது வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் (Vavuniyan)
No comments