Breaking News

மின்வெட்டு தொடர்பில் ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு


நாடு எதிர்நோக்கியுள்ள மின்சார துண்டிப்பை தவிர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பொதுமக்களுக்கு ஜனாதிபதி குறித்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்

இதன்படி, மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு திறைசேரி மற்றும் மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றும், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (Vavuniyan) 

No comments