இன்று மின்சாரம் இவ்வாறே துண்டிக்கப்படும்
நாட்டில் இன்று (10) மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று (09) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உள்ளடக்கிய பகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப் பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (Vavuniyan)
No comments