Breaking News

வவுனியாவில் சொகுசு காரில் பயணித்த மூவர் கேரள கஞ்சாவுடன் கைது.


வவுனியாவில் 8 கிலோ கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.   


யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த சொகுசு வாகனத்தை (காரினை) இன்று (16) காலை வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வழிமறித்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அதில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோ
கேரள கஞ்சாவினை மீட்டதுடன், வாகனத்தையும், அதில் பயணித்த குருணாகல் மற்றும்  கண்டி பகுதியை சேர்ந்த 44 ,41, 39 வயதுடைய  பெண் ஒருவர் உட்பட மூவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் பன்னிரெண்டு லட்சம் ரூபாய் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

No comments