Breaking News

வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற ஸ்ரீகருமாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம்.


வவுனியா - குட்செட்வீதி  ஶ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் மிகவும் சிறப்பாக  இடம்பெற்றது.

பக்தர்கள் சூழ இன்று (16) காலை  முதல் கிரியைகள் இடம்பெற்று காலை வசந்த மண்டப பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஶ்ரீ கருமாரியம்மன் வெளிவீதி வலம் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதன்போது, அடியார்கள் அங்கபிரதட்சினை , காவடிகள் மற்றும் கற்பூரசட்டி என்பவற்றை ஏந்தி தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனைகளும் இடம்பெற்றிருந்தது. (Vavuniyan)










No comments