வவுனியா, ஆச்சிபுரத்திற்குள் புகுந்த யானை குட்டி - மக்கள் அச்சத்தில்
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் பப்பாசி தோட்டத்திற்குள் நுழைந்த யானைக்குட்டி ஒன்று மீண்டும் காட்டிற்கு செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றது.
குறித்த தோட்டத்திற்குள் நுழைந்த 6 வயது மதிக்கத்தக்க யானைக் குட்டி உணவருந்த முடியாத நிலையில், தோட்டத்தில் இருந்து செல்ல முடியாத நிலையில் காணப்பட்டுள்ளது.
இதேவேளை யானையினை பார்வையிட சென்ற மக்களை துரத்தி அச்சமடைய வைத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரதேச வாசிகளால் வவுனியா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
குறித்த திணைக்களத்தினரால் வடமாகாண கால்நடை மருத்துவர் கிரிதரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வடமாகாண மருத்துவர் கிரிதரன் தலைமையிலான குழுவினர் வெங்காய வெடியினை உட்கொண்டதனாலையே யானை குட்டி உணவருந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு, யானைக்குட்டிக்கான சிகிச்சையை மேற்கொண்டிருந்தார். (Vavuniyan)
No comments