தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனை கருத்திற்கொண்டும் இதற்கான தீர்வு கிடைக்கும் வரை தனியார் பேருந்து சேவை இவ்வாறு மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கின்றார்.
தற்போதைய நிலையில், 20 சதவீதமான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது.
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண அதிகரிப்பு எரிபொருள் விலையினை முகாமைத்துவம் செய்யும் வகையில் அமையாது. மேலும் சிசெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுமாறு ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது, ஆயினும் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக காணப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை.
தற்பொழுது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வு காணும் வரை தனியார் பேருந்து சேவைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு பிரத்தியேக நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார். (Vavuniyan)
No comments