நீரில் மூழ்கிய பெண்ணைக் காப்பாற்ற முயன்ற இளைஞர்களுக்கு ஏற்பட்ட பரிதாபநிலை
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை - தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றின் யோகம பாலத்திற்கு அருகில் நீராடச் சென்றிருந்த இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
யாத்திரை குழுவை சேர்ந்த பெண்ணொருவர் நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முற்பட்ட போதே இவ்விருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்கள் ராஜகிரிய மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், நீரில் மூழ்கிய பெண் பிரதேசவாசிகளால் உயிருடன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.(Vavuniyan)
No comments