அரச உத்தியோகத்தர்களுக்கு பறந்தது உத்தரவு
சுற்றறிக்கையின் படி, அரச நிறுவனங்களில் A/C பாவனை மட்டுப்படுத்தவும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்காக வழங்கப்படும் மேலதிக எரிபொருள் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கூட்டங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக வெளிமாவட்ட அதிகாரிகளை கொழும்புக்கு அழைப்பதை மட்டுப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு மின் தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுகளை உபயோகித்தல்.
மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிர்த்து, சுகாதார வழிகாட்டலுக்கேற்ப பயணிக்கக்கூடிய உச்சபட்டச நபர்களின் எண்ணிக்கையுடன் பயணித்தல்.
மற்றும் பிற்பகல் 2.30 முதல் பி.ப 4.30 வரை A/C செயற்பாட்டை இடைநிறுத்தல், காலை வேளையில் வெளிபுறச் சூழல் வெப்பநிலை குறைவு என்பதால் ஜன்னல்களை திறந்துவைத்து, வெளிபுற காற்றோட்டத்திலிருந்து பயன்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வளிசீராக்கியை செயற்படுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.(Vavuniyan)
No comments