Breaking News

வவுனியா மாவட்ட செயலகத்தில் தொழில் சந்தை


மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்தோடு பிரதேச செயலங்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழில் சந்தை இன்றையதினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலாளர் சரத்சந்திர மற்றும் மேலதிக அராசாங்க அதிபர் திரேஸ்குமார் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

இவ் தொழில் சந்தையில் 25 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நேரடியாக வருகைதந்து தொழில் வாய்ப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 







No comments