Breaking News

அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க 120 எம்.பிக்கள் தயார் - உதய கம்மன்பில


தற்போதைய அரசாங்கம் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இல்லாவிடின் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை அடுத்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அவநம்பிக்கை பிரேரணைக்கு தாம் உட்பட 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அறிவித்திருந்தது. (Vavuniyan) 

No comments