இன்று (16) முதல் மீண்டும் மின்வெட்டு
நாட்டில் இன்றும் மற்றும் நாளையும் இதற்கு முன்னர் தீர்மானித்ததன் பிரகாரம், மின்சார வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இதன்படி, இரண்டு மணித்தியாலங்களும், 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தினங்களிலும் முற்பகல் 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதியிலேயே இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.(Vavuniyan)
No comments