Breaking News

மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி


வெள்ளவத்தை, டபிள்யூ ஏ சில்வா மாவத்தையில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படும் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த கட்டிடடத்தில் சேவையாற்றிய ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் மின்னுயர்த்திக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தை பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (Vavuniyan) 

No comments