லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு
எதிர்வரும் சில வாரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் பெருந்தொகையான சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமையல் எரிவாயு தாங்கிய மேலும் ஒரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
அந்த கப்பலில் சுமார் 3,500 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments