வவுனியாவிலும் ஆசிரியர்கள் பணி பகிஸ்கரிப்பு
வவுனியா மாவட்ட அதிபர் ஆசிரியர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்ததோடு மாணவர்களின் வருகையும் மந்தகதியில் இருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் தமது பதவிகளை இராஜினாமா செய்ய விரும்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000க்கு மேற்பட்ட தொழிற்ச்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியாவிலும் ஆசிரியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments