Breaking News

வவுனியாவில் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்


வவுனியா மாவட்ட அதிபர் ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

 வவுனியா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்ததோடு மாணவர்களின் வருகையும் மந்தகதியில்  இருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை உயர்வு மற்றும்  அரசாங்கத்திற்கு எதிராகவுமே ஆசிரியர்கள் இந்த சுகயீன விடுமுறை போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

சுகயீன விடுமுறையை அறிவிப்பதற்காக ஆசிரியர்கள் தபால் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நின்றிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. (Vavuniyan)






No comments