Breaking News

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு


எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு 8,500 மெற்றிக் தொன் எரிவாயு கிடைக்கும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவிக்கின்றது.

அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டின் ஊடாக குறித்த எரிவாயுத் தொகை இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 18-ம் திகதி முதல் உற்பத்தி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (Vavuniyan) 

No comments