Breaking News

ஒரு நாளேனும் காலக்கெடு வழங்கப்படாது


நேற்று (18) நள்ளிரவிலிருந்து சிபெட்கோ நிறுவனமானது எரிபொருள்களின் விலையை அதிகரித்துள்ளதால், எதிர்வரும் சில மணித்தியாலங்களில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

எனவே,  உடனடியாக பேருந்து கட்டணங்கள் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும். அரசாங்கம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரிவித்துள்ள அவர், இதற்காக ஒரு நாளேனும் காலக்கெடு வழங்கப்படாது என்றார்.

தற்போது 90 சதவீதமான தனியார் பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகியிருப்பதாகவும் இந்நிலையில், உடனடியாக பேரு கட்டணங்களை திருத்தாவிடின், இன்று பகலுடன் தனியார் பேருந்து சேவைகள் போக்குவரத்திலிருந்து விலகும் என்றும் எச்சரித்துள்ளார். (Vavuniyan) 

No comments