Breaking News

வவுனியாவில் 4956 மாணவர்கள்!! 43 நிலையங்கள்!!


க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்துசெய்யப்பட்டு இன்றையதினம் பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது.  

இம்முறை சாதாரண தரபரீட்சைக்கு வவுனியாவில் 4956 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 43 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 14 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 517496 பேர் தோற்றவுள்ளனர். இவர்களில் 407129 பாடசாலை பரீட்சார்த்திகளும் 110367 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)











No comments