Breaking News

மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு


நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மூன்றரை  மணித்தியாலத்திற்கும் அதிகமான காலம் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.  

இதன்படி,  நாடளாவிய ரீதியில் இன்று  3 மணித்தியாலம் 40 நிமிடங்கள்மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.  

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5  மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில்1 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும்,'எம்' முதல் 'இஸட் வரையான வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி  வரையானகாலப்பகுதியிலும், சிசி வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியிலும் தலா 3 மணி நேரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (Vavuniyan) 

No comments