கோர விபத்து- ஸ்தலத்தில் பலியான அரச உத்தியோகத்தர்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் முன்னே சென்ற மோட்டார்சைக்கிளுடன் பின்னே வந்த சொகுசு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவில் சமூர்த்தி வங்கியில் காசாளராக கடைமையாற்றும் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நாகராசா விஜேந்திரன் வயது 58 எனும் அரச உத்தியோகஸ்தரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments