வாள்வெட்டு: இருவர் காயம்
தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக நேற்று (4) இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.
3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன், மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (Vavuniyan)
No comments