Breaking News

அவிசாவளையில் பாடசாலை மாணவனொருவன் மாயம் -பொலிஸில் முறைப்பாடு


அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் பெற்றோர் நேற்று இரவு பொலிஸ் நிலையில் இதுகுறித்து முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனவர் 15 வயதுடைய பாடசாலை மாணவர் என்றும் இவர் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து சில நாட்கள் கழித்து திரும்பி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments