பட்டப்பகலில் மன்னாரில் இடம்பெற்ற கோரம்!!! இருவர் பலி - 4 பேர் படுகாயம்
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் என்று தெரியவந்துள்ளது.
சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments