பதவி நீக்கத்திற்கு தடை உத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிமல் சிறிபால டி சில்வா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments