வவுனியாவில் தீப்பற்றி எரிந்த சூரிய மின் உற்பத்தி நிலையம்
வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டது.
நேற்று இரவு 10 மணியளவில் கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்திலேயே திடீரென்று இவ்வாறு தீப்பற்றியது
இதன்போது அவ் நிலையத்தில் புதிதாக பொறுத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி எறிந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும் புதிதாக பொறுத்துவதற்கென வைகக்ப்பட்டிருந்த சூரிய மின்கலங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். (Vavuniyan)
No comments