மோட்டார் சைக்கிள் விபத்தில் - பாடசாலை மாணவன் பலி
வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
வடமராட்சி, மண்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளை செலுத்திய நிலையில், குறித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதில் சுவர் ஒன்றுடன் மோதுண்டத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு சிறுவன் காயமடைந்துள்ளார். (Vavuniyan)
No comments