அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை
அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சினால் இந்த விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை அனுமதி
அரச ஊழியர்கள் வெளிநாட்டு செல்வதற்கு சம்பளமில்லாத விடுமுறை வழங்க கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது.
அதற்கமைய இன்று குறித்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
இதன்படி, சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச ஊழியர்கள் தமது சேவைக்காலத்தில் 5 வருடங்களுக்கு உட்பட்டு, வெளிநாடு செல்வதற்கு சம்பளமில்லாத விடுமுறையினை பெற்றுக்கொள்ள முடியுமென அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments