இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் வவுனியாவில் இயந்திர தொகுதி வழங்கி வைப்பு
பெரன்டினா நிறுவனத்தால் இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் வவுனியாவில் இயந்திர தொகுதி ஒன்று நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
மூன்று இலட்சம் பெறுமதியான குறித்த இயந்திர தொகுதியின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்ற இயற்கை பசளையினை சந்தைப்படுத்தும் செயற்பாட்டினையும் குறித்த நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி தர்சினி சஜீவன், விவசாய பாடவிதான அலுவலகர் சுரேந்திரா, நிறுவனத்தின் முகாமையாளர் ருபேசன், EDO து.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments