Breaking News

வாகன இறக்குமதி குறித்து ஐ.எம்.எப் வெளியிட்ட முக்கிய தகவல்



வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் இருக்கும் நிதி கையிருப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின்  இலங்கை தூதரகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது நிதிக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் 2025 பெப்ரவரிக்குள் தளர்த்தப்படும் என முன்னைய அரசாங்கம் அறிவித்திருந்தது. புதிய அரசாங்கம் அதன்படி செயல்பட்டால், ஐஎம்எவ் பரிந்துரைகளுக்கு இணங்குமா?என கேட்கப்பட்ட கேள்விக்கு பீட்டர் ப்ரூவர் பின்வருமாறு பதில் அளித்துள்ளார்.

மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் முடிவு நிதிக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகியுள்ளது. அது தொடர்பான மதிப்பீட்டிலும், முன்னேயே மதிப்பீட்டில் உம் நாங்கள் கலந்துரையாடினோம்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான ஆதாரமாகவும் உள்ளது.  எனினும் அரச வருவாயை அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும், நாட்டின் கையிருப்புகளை கவனமாக நிர்வகிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்

No comments