வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய தரம் ஐந்து மாணவர்களின் கலை விழா
வவுனியாவில் தமிழ் மத்திய மகாவித்தியாலய தரம் ஐந்து மாணவர்களின் கலைவிழா நிகழ்வு இன்றையதினம் பாடசாலை ஐயாத்துரை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது தரம் ஐந்து மாணவர்களால் வில்லுப்பாட்டு, நாடகம் மற்றும் பேச்சு என் பல்வேறு கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டிருந்தது.
பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய ஆரம்பப் பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் பி.ஆர்.அஸ்லம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை பகுதி தலைவர்களான ஜெயந்தி அருட்செல்வம், ஜெசிந்தா பிரியதர்சினி மரியநாயகம் மற்றும் ஓய்வுநிலை ஆசிரியர் இன்பவதனி யோகதாசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments