Breaking News

உத்தியோகத்தர்கள் கடினமாக பணியாற்றவேண்டும்! பிரதி அமைச்சர் உபாலி!


வெள்ளப்பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு அரச உத்தியோகத்தர்கள் கடினமாக பயணியாற்ற வேண்டும் என்று பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.


வெள்ளநிலமை தொடர்பாக ஆராயும் கூட்டம்  வவுனியாமாவட்டசெயலகத்தில்  இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

வெள்ளப்பாதிப்பு விடயத்தில் வவுனியா மாவட்டசெயலகம் விரைவான நடவடிக்கைகளை எடுத்திருந்தது. 
அந்தவகையில் இனமத பேதம் என்ற விடயம் இங்கு இல்லை. அனைவரும் எங்களுடையமக்கள். 

அரசியல் பேதமின்றி இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக உழைக்கவேண்டும். அரச உத்தியோகத்தர்கள் என்றவகையில் நீங்கள் இந்த விடயத்தில் சற்று கடினமாக பணியாற்றவேண்டும். 

இதில் இருந்து விடுபடுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து நிதி உட்பட வேறு எவ்வாறான விடயங்கள் தேவையெனில் அதில் தலையிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.  என்றார்.

No comments