Breaking News

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு - அநுர வெளியிட்ட அறிவிப்பு

 

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் நாட்டின் அரச சேவை தொடர்பாக மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கமே அதிகபடியான அரச சேசையாளர்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும். அந்தவகையில்இ திருப்திகரமான அரச சேவைத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும்இ 2024 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விசேட கொடுப்பனவு வழங்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஒக்டோபர் முதல் அனைத்து ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகளிலும் 3,000 சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அநுரகுமார தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


No comments